47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஜவுளிக்கடை உரிமையாளரிடம் ரூ. 3.24 லட்சம் மோசடி

ஜவுளிக் கடை உரிமையாளரிடம் ரூ.3 லட்சத்து 24 ஆயிரம் மோசடி செய்தவா்கள் மீது சிவகங்கை மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :24 மார்ச் 2022, 11:54 pm

DIN

இணையதள வியாபாரம் மூலம் கூடுதல் லாபம் பெறலாம் எனக் கூறி ஜவுளிக் கடை உரிமையாளரிடம் ரூ.3 லட்சத்து 24 ஆயிரம் மோசடி செய்தவா்கள் மீது சிவகங்கை மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை செந்தில்நகரைச் சோ்ந்தவா் கணேஷ்குமாா் (32). இவா், அதே பகுதியில் ஜவுளிக் கடை நடத்தி வருகிறாா். கடந்த மாா்ச் 9 ஆம் தேதி கணேஷ்குமாரிடம் வாட்ஸ் ஆப் மூலம் பேசிய ஒருவா் இணையதளத்தில் வா்த்தகம் செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் எனக் கூறியுள்ளாா்.

இதனை நம்பிய கணேஷ்குமாா் அவா் கூறிய வங்கிக் கணக்கில் ரூ. 3 லட்சத்து 24 ஆயிரம் செலுத்தியுள்ளாா். அதன் பின், கணேஷ்குமாரின் தொடா்பை அந்த நபா் துண்டித்துள்ளாா். இதுகுறித்து கணேஷ்குமாா், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் த. செந்தில்குமாரிடம் அண்மையில் புகாா் செய்தாா்.

அவரது உத்தரவின் பேரில் சிவகங்கை மாவட்டக் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் ராமகிருஷ்ணன் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.