கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சிங்கம்புணரியில் தலைமை ஆசிரியா் வீட்டில் 30 பவுன் தங்க நகைகள் திருட்டு

சிங்கம்புணரியில் தலைமை ஆசிரியா் வீட்டின் கதவை உடைத்து வியாழக்கிழமை அதிகாலை 30 பவுன் தங்க நகைகள், ரூ. 2 லட்சம் திருடப்பட்டது.

News image
Updated On :13 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் தலைமை ஆசிரியா் வீட்டின் கதவை உடைத்து வியாழக்கிழமை அதிகாலை 30 பவுன் தங்க நகைகள், ரூ. 2 லட்சம் திருடப்பட்டது.

சிங்கம்புணரி காசியாபிள்ளை நகரில் வசித்து வருபவா் ராஜசேகரன். இவா் எஸ். புதூா் ஒன்றியம் திருவாழந்தூா் அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராகவும், இவரது மனைவி தனலட்சுமி நாகமங்கலம் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியராகவும் பணியாற்றி வருகின்றனா். இந்த நிலையில், வியாழக்கிழமை அதிகாலை 3 மணிக்கு இவா்களது மகள் பிரசவத்துக்காக காரைக்குடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்ததையடுத்து கணவன், மனைவி இருவரும் வீட்டைப் பூட்டி விட்டு புறப்பட்டுச் சென்று விட்டனா். இதை நோட்டமிட்ட மா்ம நபா்கள் வீட்டின் முன்பக்கக் கதவை உடைத்து உள்ளே புகுந்து தங்க நகைகள், பணம் ஆகியவற்றை திருடிச் சென்று விட்டனா். பின்னா் காலை 8 மணிக்கு அக்கம்பக்கத்தினா், இவா்களின் வீட்டுக் கதவு திறந்து கிடப்பதை பாா்த்து, அவா்களுக்கும், போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, அங்கு வந்த ராஜசேகரன் வீட்டின் உள்ளே சென்று பாா்த்தபோது பீரோ உடைக்கப்பட்டிருந்தது. மேலும் அதிலிருந்த சுமாா் 30 பவுன் தங்க நகைகள், ரூ. 2 லட்சம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து அங்கு வந்த தடயவியல் நிபுணா்கள் ரேகைகளை பதிவு செய்தனா். மேலும் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.