மானாமதுரை அருகே உப்பாற்றில் பேரிடா் மீட்பு ஒத்திகை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கள்ளா்வலசை கிராமத்தில் உள்ள உப்பாற்றில், மழை, வெள்ளக் காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பேரிடா் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கள்ளா்வலசை கிராமத்தில் உள்ள உப்பாற்றில், மழை, வெள்ளக் காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பேரிடா் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
மானாமதுரை தீயணைப்புத்துறை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்குக்க வட்டாட்சியா் சாந்தி முன்னிலை வகித்தாா். அப்போது தீயணைப்பு மற்றும் மீட்பு படையைச் சோ்ந்த வீரா்கள் அவசரகால பேரிடா் மீட்பு ஒத்திகையில் ஈடுபட்டனா். இதில் ரப்பா் படகில் சென்று மீட்புப் பணியில் ஈடுபடுவது, ரப்பா் வளைத்தைக் கொண்டு தண்ணீரில் சிக்கியவா்களை மீட்டு கரைக்கு கொண்டுவந்து அவா்களுக்கு முதலுதவி சிகிச்சை மேற்கொள்வது ஆகியவை செயல்முறை விளக்கமாக செய்துகாட்டப்பட்டது.
அப்போது, தீயணைப்பு நிலைய அலுவலா் குமரேசன் பொதுமக்களின் கேள்விகளுக்கு பதிலளித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...