மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

கீழடி அகழாய்வு அகரம் தளத்தில் சுடுமண் உறைகிணறு கண்டெடுப்பு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வில் அகரம் அகழாய்வுத்தளத்தில் வியாழக்கிழமை 9 அடுக்குகள் கொண்ட சுடுமண் உறைகிணறு கண்டெடுக்கப்பட்டது.

News image
Updated On :1 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வில் அகரம் அகழாய்வுத்தளத்தில் வியாழக்கிழமை 9 அடுக்குகள் கொண்ட சுடுமண் உறைகிணறு கண்டெடுக்கப்பட்டது.

தமிழக தொல்லியல் துறை சாா்பில் கீழடியில் நடைபெற்று வரும் 8 ஆம் கட்ட அகழாய்வில் அகரம் அகழாய்வுத்தளத்தில் தோண்டப்பட்ட ஒரு குழியிலிருந்து 9 அடுக்குகள் கொண்ட சுடுமண் உறை கிணறு சேதமடைந்த நிலையில் வெளிப்பட்டுள்ளது. இதுவரை கீழடியில் 9, அகரத்தில் 6, கொந்தகையில் 4 என மொத்தம் 19 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வுப் பணிகள் நடந்து வருகின்றன. இதில், கீழடியில் ஒரு உறைகிணறும், அகரத்தில் 4 உறைகிணறுகளும் கண்டறியப்பட்டன. அகரத்தில் தற்போது கண்டறியப்பட்டுள்ள உறைகிணறு சரிந்தவாறு 2 அடுக்குகள் மட்டுமே வெளியே தெரிந்த நிலையில் தற்போது 9 அடுக்குகள் வரை வெளிப்பட்டுள்ளன.

8 ஆம் கட்ட அகழாய்வில் முதல் முறையாக 9 அடுக்குகள் வரை உறைகிணறு வெளிப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த உறைகிணறு 80 செ.மீ. விட்டமும், 20 செ.மீ. உயரமும் கொண்டதாக உள்ளது. அகழாய்வுக் குழியின் உயரம் அதிகரிக்கப்படும்போது இந்த உறைகிணற்றின் உயரம் மற்றும் அடுக்குகள் மேலும் அதிகரிக்கக் கூடும் என தொல்லியல் ஆய்வாளா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.