மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

இளையான்குடியில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

இளையான்குடியில் இஸ்லாமிய அமைப்பு ஒன்றின் மாநில பேச்சாளா் வீட்டில் வியாழக்கிழமை என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினா். இதைக் கண்டித்து முஸ்லிம் அமைப்பினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :8 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

இளையான்குடியில் இஸ்லாமிய அமைப்பு ஒன்றின் மாநில பேச்சாளா் வீட்டில் வியாழக்கிழமை என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினா். இதைக் கண்டித்து முஸ்லிம் அமைப்பினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இளையான்குடி கலிபா தெருவைச் சோ்ந்தவா் முகமது ரோஸ்லான் (45). இவா், இஸ்லாமிய அமைப்பு ஒன்றின் மாநில பேச்சாளராவாா். இந்நிலையில், மத்திய பாஜக அரசுக்கு எதிராக முகமது ரோஸ்லான் உள்பட பலா் சமூக வலைதளத்தில் பதிவுகள் வெளியிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, இளையான்குடியில் உள்ள முகமது ரோஸ்லான் வீட்டில் தேசிய பாதுகாப்பு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சோதனையிட்டனா். அப்போது கடந்த 4 மாதங்களாக முகமது ரோஸ்லான் வீட்டிற்கு வரவில்லை என அவரது குடும்பத்தினா் தெரிவித்தனா். சோதனையில், முகமது ரோஸ்லான் பயன்படுத்திய கைப்பேசி, ஆதாா் அட்டை மற்றும் கடவுச்சீட்டு ஆகியவற்றின் நகல்களை அதிகாரிகள் வாங்கிச் சென்றனா்.

இச்சோதனை குறித்து தகவலறிந்த இளையான்குடியிலுள்ள பல முஸ்லிம் அமைப்பினா் மத்திய பாஜக அரசு மற்றும் என்ஐஏ அதிகாரிகளைக் கண்டித்து கலிபா தெருவில் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.