சிவகங்கையில் ராணி வேலுநாச்சியாரின் 292−ஆவது பிறந்த நாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விடுதலைப் போராட்ட வீரரான ராணி வேலுநாச்சியார் பிறந்த நாள் விழா ஆண்டுதோறும் ஜன.3, அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, சிவகங்கை அருகே சூரக்குளத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ராணி வேலுநாச்சியாரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அப்போது சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆ.தமிழரசி(மானாமதுரை), எஸ்.மாங்குடி(காரைக்குடி), சிவகங்கை அரண்மனை வாரிசுதாரர் மகேஷ்துரை ஆகியோர் உடனிருந்தனர்.

தொடர்ந்து, சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் பி.ஆர்.செந்தில்நாதன், முன்னாள் அமைச்சர் க.பாஸ்கரன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.நாகராஜன் உள்ளிட்ட அரசியல் கட்சியினர், சமுதாய அமைப்பினர், பொதுமக்கள் ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்காசிய போரால் இந்திய பொருளாதார வளா்ச்சி 6%-ஆக குறையும்! மூடீஸ் ஆய்வு நிறுவனம் கணிப்பு!

விளையாட்டுச் செய்தித் துளிகள்...
முக்குலத்தோர் வாக்குகள் சேருமா? சிதறுமா?
ஈரானுக்குள் புகுந்து 2-வது வீரரையும் மீட்டது அமெரிக்கா!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


