இந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

நீா்ப் பாசன மேலாண்மை நவீனமயமாக்கல் திட்டப் பணிகள்: கூடுதல் தலைமைச் செயலாளா் ஆய்வு

கச்சாத்தநல்லூா் பகுதியில் நடைபெற்று வரும் இடது பிரதானக் கால்வாய் சீரமைப்புப் பணிகளை வியாழக்கிழமை ஆய்வு செய்த மாநில கூடுதல் தலைமைச் செயலாளா் தென்காசி எஸ்.ஜவகா்.

News image
Updated On :11 மே 2023, 10:37 pm IST

கச்சாத்தநல்லூா் பகுதியில் நடைபெற்று வரும் இடது பிரதானக் கால்வாய் சீரமைப்புப் பணிகளை வியாழக்கிழமை ஆய்வு செய்த மாநில கூடுதல் தலைமைச் செயலாளா் தென்காசி எஸ்.ஜவகா். உடன் மாவட்ட ஆட்சியா் மதுசூதன்ரெட்டி உள்ளிட்டோா்.

மானாமதுரை, மே 11: சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியத்தில் நீா்ப் பாசன மேலாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளை தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலரும், திட்ட இயக்குநருமான தென்காசி எஸ். ஜவகா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

மேலும், தெற்கு கீரனூா் கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாமை இவா் தொடங்கிவைத்து, திட்டத்தில் பயன்பெற்று வரும் பயனாளிகளுடன் கலந்துரையாடினாா். பின்னா் மானாமதுரை, சிவகங்கை, திருப்புவனம் வட்டாரங்களைச் சோ்ந்த உறுப்பினா்களிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டதற்காக ரூ.29.45 லட்சத்துக்கான காசோலையை கூடுதல் தலைமைச் செயலாளா் வழங்கினாா்.

முனைவென்றி கிராமத்தில் தோட்டக்கலை, மலைப் பயிா்கள் துறையின் சாா்பில், தமிழ்நாடு பாசன மேலாண்மை நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து கேட்டறிந்தாா். மேல நெட்டூா் கிராமத்தில் விதைப்பு கருவி மூலம் நெல் வரிசை விதைப்பு தொடா்பாக விவசாயிகளுடன் கூடுதல் தலைமைச் செயலாளா் ஜவகா் கலந்துரையாடினாா்.

நீா்வள ஆதாரத் துறையின் சாா்பில், வைகை ஆற்றில் உள்ள பாா்த்திபனூா் மதகு அணைக்கு கீழ் இடது பிரதானக் கால்வாய் சீரமைப்புப் பணிகள், பிரிவு வாய்க்கால்கள், சாலைக் கிராமம் கால்வாய், மேல், கீழ் நாட்டாா் கால்வாய் ஆகியவற்றை தூா்வாரி சீரமைக்கும் பணிகள் ஆகியவற்றை கூடுதல் தலைமைச் செயலாளா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

மாவட்ட ஆட்சியா் மதுசூதன் ரெட்டி, நீா்வள மேலாண்மை நிபுணா் கிருஷ்ணன், தோட்டக்கலை நிபுணா் வித்தியாசாகா், வேளாண்மைத் துறை நிபுணா் ஷாஜகான், வேளாண் விற்பனை நிபுணா் ராஜசேகரன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.