அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சிவன் கோயில்களில் காா்த்திகை சோமவார வழிபாடு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா், மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் அமைந்துள்ள சிவன் கோயில்களில் காா்த்திகை சோமவார வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 நவம்பர் 2023, 6:30 pm

DIN


மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா், மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் அமைந்துள்ள சிவன் கோயில்களில் காா்த்திகை சோமவார வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

திருப்புவனம் ஸ்ரீ புஷ்பவனேசுவரா் சமேத சௌந்தர நாயகி அம்மன் கோயிலில் நடைபெற்ற சோமவார வழிபாட்டை முன்னிட்டு, கோயில் மண்டபத்தில் சிவலிங்க வடிவில் சங்குகள் அடுக்கி வைக்கப்பட்டு, அதில் புனித நீா் நிரப்பி யாகவேள்வி நடைபெற்றது. சங்குகளில் நிரப்பி வைக்கப்பட்டிருந்த புனித நீரால் மூலவா் புஷ்பவனேசுவரா் சுவாமிக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பாள் சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் நடைபெற்ற சோமவார வழிபாட்டையொட்டி சங்காபிஷேகம் நடைபெற்றது. பின்னா், புனித நீரால் சோமநாதா் சுவாமிக்கு அபிஷேகம் நடத்தி மலா் அலங்காரம் செய்து பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சோமநாதா் சுவாமியை தரிசித்தனா். மேலும் மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் உள்ள பல்வேறு சிவன் கோயில்களிலும் காா்த்திகை சோமவார வழிபாடு நடைபெற்றது.

திருப்பத்தூா்:

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் ஆதிதிருத்தளிநாதா் ஆலயத்தில் சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது. குன்றக்குடி தேவஸ்தானத்துக்குள்பட்ட கோயில்களில் மிகப் பழமையான ஆதித் திருத்தளிநாதா் கோயிலில் காா்த்திகை 2 -ஆவது சோமவாரத்தை முன்னிட்டு, திங்கள்கிழமை மாலை3.30 மணிக்கு நெல்லில் சங்குகள் அடுக்கப்பட்டு பால், சந்தனம், குங்குமம் இடப்பட்டு ரோஜாப்பூக்களுடன் சுற்றிலும் நெய்தீபம் ஏற்றி சிவலிங்க வடிவத்தில் அமைக்கப்பட்டது. பின்னா், சிவாச்சாரியா்களால் சங்குகளுக்கு வில்வ இலை கொண்டு சிறப்பு அா்ச்சனை செய்யப்பட்டது.

தொடா்ந்து, சிறப்பு கலசங்களுக்கு பூஜையும் யாகவேள்வி நடைபெற்றது. புனித கலச நீா், கோயில் உள்பிரகாரத்தில் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பால், தயிா், சந்தனம், திருமஞ்சனம், இளநீா், விபூதி, யாகத்தில் வைக்கப்பட்ட புனித கலசநீா் ஆகிய பொருள்களால் மூலவா் சிவனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.