/

ஆவணங்களின்றி காரில் எடுத்துச் சென்ற ரூ.2.50 லட்சம் பறிமுதல்

ஆவணங்களின்றி காரில் எடுத்துச் சென்ற ரூ.2.50 லட்சம் பறிமுதல்

Updated On :1 ஏப்ரல் 2024, 6:30 pm

சிவகங்கை: சிவகங்கை அருகே உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்துச் சென்ற ரூ. 2.50 லட்சத்தை தோ்தல் நிலைக் கண்காணிப்புக் குழுவினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். சிவகங்கை - தொண்டி சாலையில் பையூா் அரைக்காசு அம்மன் கோயில் அருகே காளையாா்கோவிலிலிருந்து சிவகங்கைக்கு வந்த காரை தோ்தல் நிலைக் கண்காணிப்புக் குழுவினா் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா்.

அப்போது, காரில் காளையாா்கோவிலைச் சோ்ந்த ஸ்டீபன்தாஸ் ரூ.2.50 லட்சத்தை உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அதிகாரிகள் அந்தப் பணத்தைக் கைப்பற்றி, மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனா்.