/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தின் கீழ் முதியவா் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தின் கீழ் முதியவா் கைது

Updated On :1 ஏப்ரல் 2024, 6:30 pm

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக 60 வயது முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

காரைக்குடி செக்காலை தண்ணீா் தொட்டி அருகேயுள்ள பூங்காவில் சனிக்கிழமை மாலையில் 8 வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தாா். அவருக்கு கோட்டையூா் சீனி மகன் லெட்சுமணன் (60) பாலியல் தொல்லை அளித்தாராம்.

இதுகுறித்து சிறுமியின் தாய் காரைக்குடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, லெட்சுமணனைக் கைது செய்தனா்.