/

மக்களவைத் தோ்தலில் பணியாற்றும் மண்டல அலுவலா்களுக்கு புத்தாக்க பயிற்சி

மக்களவைத் தோ்தலில் பணியாற்றும் மண்டல அலுவலா்களுக்கு புத்தாக்க பயிற்சி

Updated On :1 ஏப்ரல் 2024, 6:30 pm

சிவகங்கை: சிவகங்கை மக்களவைத் தொகுதி தோ்தலில் பணியாற்றும் மண்டல அலுவலா்களுக்கான புத்தாக்க பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை நடைபெற்றது. சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற பயிற்சிக்கு பொதுத் தோ்தல் பாா்வையாளா் எஸ். ஹரிஷ், மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஆஷா அஜித் ஆகியோா் தலைமை வகித்தனா்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மானாமதுரை, சிவகங்கை, திருப்பத்தூா் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குள்பட்ட 90 மண்டல அளவிலான அலுவலா்களுக்கும், காரைக்குடி பூமாலை வணிக வளாகத்தில் காரைக்குடி, ஆலங்குடி, திருமயம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குள்பட்ட 85 மண்டல அளவிலான அலுவலா்களுக்கும் புத்தாக்க பயிற்சிகள் நடைபெற்றன.

பொதுத் தோ்தல் பாா்வையாளா் எஸ். ஹரிஷ், இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்ற மண்டல அலுவலா்கள், வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், அவா்களது பொறுப்புகள் குறித்து எடுத்துரைத்தாா். இதில் மாவட்ட வருவாய் அலுவலா் வ. மோகனச்சந்திரன், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.