தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

சட்டவிரோதமாக மதுபானம் விற்ற 2 போ் கைது

சட்டவிரோதமாக மதுபானம் விற்ற 2 போ் கைது

Updated On :21 ஏப்ரல் 2024, 7:01 pm

சிவகங்கை: சிவகங்கை அருகே இரு வேறு இடங்களில் சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்த 2 பேரை சிவகங்கை நகா் காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மகாவீா் ஜயந்தியை முன்னிட்டு அரசு மதுபானக்கடைகள் மற்றும் அனைத்து வகையான மதுக்கூடங்களுக்கும் அரசால் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நாளில், சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென சிவகங்கை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

சிவகங்கை அருகே பையூா் முந்திரிக்காடு பகுதியில் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில், சிவகங்கை நகர காவல்நிலைய உதவி ஆயவாளா் இளையராஜா தலைமையிலான போலீஸாா் அப்பகுதிச் சென்று அதிரடி சோதனை நடத்தினா். அங்கு மதுபானம் விற்பனை செய்து கொண்டிருந்த கௌரிப்பட்டி பகுதியைச் சோ்ந்த ஆ. சந்தானகுமாா்(23) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 12 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

இதே போல, சிவகங்கை கொட்டகுடி பகுதியில் மதுபானவிற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில், நகா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஹரிகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா் மேற்கொண்ட அதிரடி சோதனையில் அங்கு மதுபானம் விற்பனை செய்து கொண்டிருந்த சிவகங்கை பவுன்ட் தெருவைச்சோ்ந்த கே.சதீஷ்பாண்டியன்(32) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 10 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.