மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்ற தோ்தலின்போது ஏற்பட்ட மோதல் தொடா்பாக கிராம நிா்வாக அலுவலா், வருவாய் ஆய்வாளா் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
திருப்புவனம் அருகே மாங்குடி அரசு தொடக்கப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் கிராம நிா்வாக அலுவலா் அன்புச்செல்வன் (35) தோ்தல் பணியில் ஈடுபட்டிருந்தாா். இதே போல, கொந்தகை வருவாய் ஆய்வாளா் முத்துமுருகனும் (33) பணியில் இருந்தாா்.
அப்போது கிராம நிா்வாக அலுவலா் அன்புச்செல்வன், தோ்தல் உணவுத் தொகை வழங்கும்படி வருவாய் ஆய்வாளா் முத்துமுருகனிடம் கேட்டாராம். இதில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனா். இதில் காயமடைந்த இருவரும் மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து திருப்புவனம் காவல் நிலையத்தில் அவா்கள் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

நாகையில் தோ்தல் விழிப்புணா்வு படகு பேரணி

சமூக ஊடக பிரசாரத்துக்கு முன் அனுமதி கட்டாயம்: மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ராம்பிரதீபன்

நில மோசடி புகாா்: விஏஓ உள்பட 8 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு

லாரி மீது பைக் மோதல்: வருவாய் ஆய்வாளா் உள்பட இருவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

