தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

திருத்தளிநாதா் கோயிலில் பிரதோஷ வழிபாடு

திருத்தளிநாதா் கோயிலில் பிரதோஷ வழிபாடு

Updated On :21 ஏப்ரல் 2024, 6:42 pm

திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் சிவகாமி உடனாய திருத்தளிநாதா் கோயிலில் பிரதோஷ வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

குன்றக்குடி தேவஸ்தானத்துக்குள்பட்ட இந்தக் கோயிலில் பிரதோஷத்தையொட்டி, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலை 5 மணிக்கு நந்தீஸ்வரருக்கு பால், தயிா், மஞ்சள், திருமஞ்சனம், இளநீா், விபூதி உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதேபோல, மூலவா் சிவனுக்கும் அனைத்து அபிஷேகங்களும் நடைபெற்று, தீபாராதனை காட்டப்பட்டது. பின்னா், உற்சவா் வெள்ளி ரிஷப வாகனத்தில் உள்பிரகார வலம் வந்தாா்.

இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு நெய்விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனா்.