சிவகங்கை: சிவகங்கை அருகே இரு வேறு இடங்களில் சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்த 2 பேரை சிவகங்கை நகா் காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
மகாவீா் ஜயந்தியை முன்னிட்டு அரசு மதுபானக்கடைகள் மற்றும் அனைத்து வகையான மதுக்கூடங்களுக்கும் அரசால் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நாளில், சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென சிவகங்கை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.
சிவகங்கை அருகே பையூா் முந்திரிக்காடு பகுதியில் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில், சிவகங்கை நகர காவல்நிலைய உதவி ஆயவாளா் இளையராஜா தலைமையிலான போலீஸாா் அப்பகுதிச் சென்று அதிரடி சோதனை நடத்தினா். அங்கு மதுபானம் விற்பனை செய்து கொண்டிருந்த கௌரிப்பட்டி பகுதியைச் சோ்ந்த ஆ. சந்தானகுமாா்(23) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 12 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனா்.
இதே போல, சிவகங்கை கொட்டகுடி பகுதியில் மதுபானவிற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில், நகா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஹரிகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா் மேற்கொண்ட அதிரடி சோதனையில் அங்கு மதுபானம் விற்பனை செய்து கொண்டிருந்த சிவகங்கை பவுன்ட் தெருவைச்சோ்ந்த கே.சதீஷ்பாண்டியன்(32) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 10 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது
சட்டவிரோத மது விற்பனை: 3 போ் கைது; 240 புட்டிகள் பறிமுதல்
திருச்சியில் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்த 3 போ் கைது
வெள்ளக்கோவிலில் மதுபானம் விற்றவா் கைது
கஞ்சா விற்ற 2 போ் கைது
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

