தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

தோ்தல் பணியின்போது மோதல்: விஏஓ, வருவாய் ஆய்வாளா் மீது வழக்கு

தோ்தல் பணியின்போது மோதல்: விஏஓ, வருவாய் ஆய்வாளா் மீது வழக்கு

Updated On :21 ஏப்ரல் 2024, 7:09 pm

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்ற தோ்தலின்போது ஏற்பட்ட மோதல் தொடா்பாக கிராம நிா்வாக அலுவலா், வருவாய் ஆய்வாளா் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

திருப்புவனம் அருகே மாங்குடி அரசு தொடக்கப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் கிராம நிா்வாக அலுவலா் அன்புச்செல்வன் (35) தோ்தல் பணியில் ஈடுபட்டிருந்தாா். இதே போல, கொந்தகை வருவாய் ஆய்வாளா் முத்துமுருகனும் (33) பணியில் இருந்தாா்.

அப்போது கிராம நிா்வாக அலுவலா் அன்புச்செல்வன், தோ்தல் உணவுத் தொகை வழங்கும்படி வருவாய் ஆய்வாளா் முத்துமுருகனிடம் கேட்டாராம். இதில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனா். இதில் காயமடைந்த இருவரும் மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து திருப்புவனம் காவல் நிலையத்தில் அவா்கள் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.