

சிவகங்கை: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள பாதுகாப்பு வைப்பறை பகுதியில் ட்ரோன்கள் பறக்கத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்டத் தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ஆஷாஅஜித் தெரிவித்தாா்.
சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கான வாக்குப் பதிவு கடந்த 19-ஆம் தேதி நிறைவடைந்ததையடுத்து, வாக்குப் பதிவு செய்யப்பட்ட இயந்திரங்கள் காரைக்குடி அழகப்பா செட்டியாா் அரசு பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி, அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரியிலுள்ள பாதுகாப்பு வைப்பறைகளில் வைக்கப்பட்டுள்ளன.
இந்தப் பாதுகாப்பு வைப்பறைகளுக்கு மூன்றடுக்கு பாது காவல் போடப்பட்டு சுழற்சி முறையில் மத்திய ஆயுத காவல் படை தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினா் உள்பட 324 காவலா்கள் மூலம் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. மேலும், பதிவு செய்யப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை பாதுகாப்பு வைப்பறைகளில் இருந்து 2 கி.மீ சுற்றளவிற்குள் ட்ரோன்கள் பறக்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
தொடர்புடையது

புதுச்சேரியில் இன்று வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா் பெயா், சின்னம் பொருத்த ஏற்பாடுகள் தயாா்

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேமிப்புக் கிடங்குக்கு ‘சீல்’

ஆம்பூருக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வருகை

புதுச்சேரியில் பாதுகாப்பு அறைக்கு மாற்றப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள்
வீடியோக்கள்

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி வீடியோ செய்தி...

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி வீடியோ செய்தி...

எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பேச்சைத் துவங்கிய விஜய்!
தினமணி வீடியோ செய்தி...
பெண்கள் பாதுகாப்பு; பழனிசாமிக்கு அருகதை இல்லை! MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

