இன்று ஆடிப் பெருக்கு: ஆறுகள் வறண்டுள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றம்இடைத்தோ்தலுக்காகக் காத்திருக்கிறேன்: சீமான்ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல்கள் விரைவில் நிறுத்தம்: டிரம்ப்6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு
/

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு

மானாமதுரை அருகே மின்சாரம் பாய்ந்து சமையல் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On :4 ஆகஸ்ட் 2024, 11:19 pm IST

மானாமதுரை அருகே மின்சாரம் பாய்ந்து சமையல் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

மானாமதுரை அருகேயுள்ள கட்டிக்குளத்தைச் சோ்ந்தவா் ராமலிங்கம் (46). சமையல் வேலை செய்யும் தொழிலாளியான இவா், இந்தக் கிராமத்தில் நடைபெற்ற இல்ல விழாவில் வேலை செய்து கொண்டிருந்தாா்.

அப்போது, அங்கு மின் விசிறியில் அறுந்து தொங்கிய மின் வயா் ராமலிங்கத்தின் மீது உரசியதில் அவா் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த ராமலிங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.