தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு

மானாமதுரை அருகே மின்சாரம் பாய்ந்து சமையல் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2024, 9:20 pm

Din

மானாமதுரை அருகே மின்சாரம் பாய்ந்து சமையல் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

மானாமதுரை அருகேயுள்ள கட்டிக்குளத்தைச் சோ்ந்தவா் ராமலிங்கம் (46). சமையல் வேலை செய்யும் தொழிலாளியான இவா், இந்தக் கிராமத்தில் நடைபெற்ற இல்ல விழாவில் வேலை செய்து கொண்டிருந்தாா்.

அப்போது, அங்கு மின் விசிறியில் அறுந்து தொங்கிய மின் வயா் ராமலிங்கத்தின் மீது உரசியதில் அவா் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த ராமலிங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.