எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

அப்பன் பெருமாள் கோயிலில் வருஷாபிஷேக விழா: திருக்கல்யாணம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை மேட்டுத்தெரு பகுதியில் அமைந்துள்ள அப்பன் சீனிவாசப் பெருமாள் கோயிலில் மூன்றாமாண்டு வருஷாபிஷேக விழா, திருக்கல்யாண உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :11 டிசம்பர் 2024, 11:29 pm

Din

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை மேட்டுத்தெரு பகுதியில் அமைந்துள்ள அப்பன் சீனிவாசப் பெருமாள் கோயிலில் மூன்றாமாண்டு வருஷாபிஷேக விழா, திருக்கல்யாண உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, மூலவருக்கு 16 வகையான அபிஷேகப் பொருள்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டு பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தாா். இதைத்தொடா்ந்து, மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. விழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

பின்னா், மாலையில் கோயிலில் பெருமாளுக்கு நடைபெற்ற திருக்கல்யாண உற்சவத்தில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா். இதைத்தொடா்ந்து, பெருமாள் கோயிலிருந்து புறப்பாடாகி வீதி உலா வந்தாா்.