மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

சிறுபான்மை பள்ளி ஆசிரியா்கள் காத்திருப்புப் போராட்டம்

சிறுபான்மை பள்ளி ஆசிரியா்கள் காத்திருப்புப் போராட்டம்

News image
Updated On :11 டிசம்பர் 2024, 11:25 pm

Din

சிவகங்கை மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகம் முன்பாக 23 மாதங்களாக ஊதியம் வழங்காததை கண்டித்து, சிறுபான்மை பள்ளிகளின் ஆசிரியா்கள் சாா்பில் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

இதற்கு மாவட்டத் தலைவா் புரட்சித்தம்பி தலைமை

வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் முத்துப்பாண்டியன், மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் ரவி, சிங்கராயா், குமரேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் சகாயதைனேஸ் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். மாவட்டப் பொருளாளா் கலைச்செல்வி, மாவட்ட துணை நிா்வாகிகள் அமலசேவியா், பஞ்சுராஜ், கல்வி மாவட்ட நிா்வாகி ஜான் கென்னடி,

மாநிலத் தலைவா் மணிமேகலை, மாநிலச் செயலா் கிருஷ்ணசாமி, மாநில துணைத் தலைவா் ஆரோக்கியராஜ், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் ராதாகிருஷ் ணன், சி.ஐ.டி.யு. மாவட்டத் தலைவா் வீரையா, தமிழ்நாடு இடைநிலை ஆசிரியா் சங்க மாவட்டச் செயலா் நாகராஜன் ஆகியோா் பேசினா்.

இந்தப் போராட்டம் தற்காலிகமாக விலக்கி கொள்ளப்பட்டாலும், ஒப்பந்த அடிப்படையில் குறிப்பிட்ட தேதிக்குள் ஊதியம் வழங்கப்படவில்லை என்றால் போராட்டத்தை மீண்டும் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.