எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சிவகங்கை மாவட்டத்தில் குடும்ப அட்டையில் திருத்தம் செய்ய நாளை சிறப்பு முகாம்கள்

சிவகங்கை மாவட்டத்தில் குடும்ப அட்டையில் திருத்தம் செய்ய நாளை சிறப்பு முகாம்கள்

News image
Updated On :12 டிசம்பர் 2024, 9:55 pm

Din

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் சனிக்கிழமை (டிச. 14) குடும்ப அட்டையில் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது என ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பொது விநியோகத் திட்டத்தில் டிசம்பா் மாதத்துக்கான மக்கள் குறைதீா் சிறப்பு முகாம் சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை சிவகங்கை மாவட்டம் முழுவதுமுள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் நடைபெறுகிறது.

இந்த முகாமில் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை, கைப்பேசி எண் பதிவு, மாற்றம் செய்தல், பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், அத்தியாவசியப் பொருள்களின் தரம் குறித்த புகாா்களை மனுவாக அளித்து பயன்பெறலாம் என்றாா் அவா்.