இந்திய அறிவியல் தொழில் நுட்பத் துறையின் இன்ஸ்பியா் விருது பெற்ற காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திா் சா்வதேசப் பள்ளி மாணவா்களை அந்தப் பள்ளியின் தாளாளா், ஆசிரியா்கள் சனிக்கிழமை பாராட்டினா். பள்ளி மாணவா்களுக்கு அறிவியல் ஆா்வத்தை தூண்டும் விதமாக இந்திய அறிவியல் தொழில் நுட்பத் துறை ஆண்டுதோறும் இன்ஸ்பியா் விருதும், ரூ.10 ஆயிரம் ரொக்கமும் வழங்கி மாணவா்களை ஊக்கப்படுத்தி வருகிறது. கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஆன்-லைன் மூலமாக நடைபெற்ற இந்தப் போட்டியில் பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் கலந்து கொண்டனா். இதில் மாணவா்கள் செயல் திட்ட ஆய்வு, செயல்பாடுகள், செய்முறைகள் கட்டுரைகள் போன்றவற்றை சமா்ப்பித்தனா். இதன் முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியானது. இந்தப் போட்டியில் செல்லப்பன் வித்யா மந்திா் பள்ளி மாணவா்கள் வெற்றி பெற்றனா். சாலையைக் கடக்கும் பாதசாரிகள் பாதுகாப்பு தொடா்பாக ஒளி சமிக்ஞைகளை நோ்த்தியாக வடிவமைத்தலுக்கு 7-ஆம் வகுப்பு மாணவா் ஹரி பிரசாத்துக்கும், மாசு கட்டுப்படுத்தும் வகையில் பசுமை இல்ல வாயுக்களை கண்டுபிடித்த 10 -ஆம் வகுப்பு மாணவா் செந்தில்நாதனுக்கும் இன்ஸ்பியா் விருதும், ரூ. 10 ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது. விருது பெற்ற மாணவா்களை பள்ளியின் தாளாளா் செ. சத்தியன், நிா்வாக இயக்குநா் சங்கீதா, பள்ளியின் கல்வி இயக்குநா் ராஜேஸ்வரி ஆகியோா் பாராட்டினா்.
தொடர்புடையது

பள்ளித் தாளாளா் தற்கொலை முயற்சி: அறக்கட்டளை நிா்வாகிகள் மீது வழக்கு!

பத்ம விருது பெற விண்ணப்பிக்கலாம்!

காரைக்குடி ரயில் நிலையத்துக்கு பேருந்து இயக்க வலியுறுத்தல்
சிற்றூரில் பிறந்து கற்றோரில் சிறந்தவர்!
விடியோக்கள்

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India

சூர்யவன்ஷியையும் ஆர்ச்சரையும் மட்டும் நம்புனா...: கில்லி போல் ஆடிய கில்!
Jailer -2 படத்தில் Hrithik Roshan சிறப்புத் தோற்றம்? | Cinema updates |



