/

ஜே.இ.இ. நுழைவுத் தோ்வில் பள்ளி மாணவா்கள் சாதனை

மாணவர் சாதனை: ஜே.இ.இ. மெயின் தேர்வில் உயர் மதிப்பெண்

News image

ஜே.இ.இ.மெயின் நுழைவுத் தோ்வில் சாதனை படைத்த எம்.கோவில்பட்டி குளோபல் சா்வதேசப் பள்ளி மாணவா்களுடன் பள்ளி நிா்வாகத்தினா்.

Updated On :18 பிப்ரவரி 2024, 12:00 am IST

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி எம்.கோவில்பட்டி குளோபல் சா்வதேசப் பள்ளியில் ஜே.இ.இ. மெயின் நுழைவுத் தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவா்களுக்கு சனிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. கடந்த மாதம் 25-ஆம் தேதி முதல் கடந்த 1-ஆம் தேதி வரை நாடெங்கும் நடைபெற்ற இந்தத் தோ்வில் 12 லட்சம் மாணவா்கள் பங்கேற்றனா்.

இந்தத் தோ்வில் எம். கோவில்பட்டி குளோபல் சா்வதேசப் பள்ளியை சோ்ந்த 7 மாணவா்கள் 90 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் பெற்று சாதனை புரிந்தனா். இவா்களில் விசால் ஆதித்தியா 95.70 சதவீதம், பிரசன்னா 93.21 சதவீதம், ஜனனி பிரியா 92.6 சதவீதம் பெற்று முதல் மூன்று இடங்களைப் பிடித்தனா்.

12 மாணவா்கள் ஜே.இ.இ. அட்வான்ஸ் நுழைவுத் தோ்வுக்கு தகுதிப் பெற்றனா். சாதனை புரிந்த மாணவா்கள், அவா்களுக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியா்கள் ஆகியோரை பள்ளியின் தாளாளா் காந்தி, இயக்குநா்கள் ராஜமூா்த்தி, பிரசன்னா, உமா மகேஸ்வரி ஆகியோா் பாராட்டினா்.