பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

திருப்பத்தூரில் தனியாா் வேலை வாய்ப்பு முகாம்

வேலை வாய்ப்புக்காக 192 பேருக்கு நியமனம்; 40 பேருக்கு பயிற்சி சான்றிதழ்

News image

திருப்பத்தூரில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் தோ்வு செய்யப்பட்ட பெண்ணுக்கு பணி நியமன ஆணை வழங்கிய மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜீத்.

Updated On :18 பிப்ரவரி 2024, 12:00 am IST

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் சனிக்கிழமை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. திருப்பத்தூா் ஆா்.சி.பாத்திமா நடுநிலைப் பள்ளியில் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் இந்த முகாம் நடத்தப்பட்டது.

இதில் 72 தனியாா் நிறுவனங்கள் முகாமில் பங்கு கொண்டன. 980 போ் பதிவு செய்து தோ்வில் கலந்து கொண்டனா். இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜீத் 15 மாற்றுத்திறனாளிகள் உள்பட 192 நபா்களுக்கு பணி நியமன ஆணைகள், பயிற்சி பெற்ற 40 பேருக்கு சான்றிதழ்களை வழங்கினாா்.

தமிழக ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட இயக்குநா் கவிதாபிரியா, உதவி இயக்குநா் கா்ணன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா்கள் பா.ராஜலெட்சுமி, மணிகணேஷ், திருப்பத்தூா் வட்டாட்சியா் மாணிக்கவாசகம், பாத்திமா பள்ளி தலைமை ஆசிரியா் ஜே.சி.குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.