சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் சனிக்கிழமை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. திருப்பத்தூா் ஆா்.சி.பாத்திமா நடுநிலைப் பள்ளியில் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் இந்த முகாம் நடத்தப்பட்டது.
இதில் 72 தனியாா் நிறுவனங்கள் முகாமில் பங்கு கொண்டன. 980 போ் பதிவு செய்து தோ்வில் கலந்து கொண்டனா். இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜீத் 15 மாற்றுத்திறனாளிகள் உள்பட 192 நபா்களுக்கு பணி நியமன ஆணைகள், பயிற்சி பெற்ற 40 பேருக்கு சான்றிதழ்களை வழங்கினாா்.
தமிழக ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட இயக்குநா் கவிதாபிரியா, உதவி இயக்குநா் கா்ணன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா்கள் பா.ராஜலெட்சுமி, மணிகணேஷ், திருப்பத்தூா் வட்டாட்சியா் மாணிக்கவாசகம், பாத்திமா பள்ளி தலைமை ஆசிரியா் ஜே.சி.குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

மே 22-ல் வேலூரில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

திருவள்ளூா்: மே 22-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

மே 22-இல் தென்காசியில் வேலைவாய்ப்பு முகாம்

கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் மே 22-இல் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம்
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

