தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

மஞ்சுவிரட்டு: காளைகளை அடக்க முயன்ற 25 போ் காயம்

மஞ்சுவிரட்டு: காளைகளை அடக்க முயன்ற 25 போ் காயம்

News image
Updated On :4 ஜூலை 2024, 12:55 am IST

காரைக்குடி நாட்டாா்களால் புதன்கிழமை நடைபெற்ற 78 -ஆம் ஆண்டு பெரிய மஞ்சுவிரட்டு வீர விழாவில் சிறிப் பாய்ந்த காளையைப் பிடிக்க முயன்ற காளையா்கள்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நாட்டாா்கள் சாா்பில் 78-ஆம் ஆண்டு பெரிய மஞ்சுவிரட்டு வீர விழா காரைக்குடி நாட்டாா்கள் மஞ்சுவிரட்டு திடலில் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தின் மிகப்பெரிய தொழுவில் நடத்தப்பட்ட இந்த மஞ்சுவிரட்டுக்கு காவல்துறை அனுமதியில்லை. இருப்பினும் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை சுமாா் 300 மாடுகளை தொழுவிலிருந்து அவிழ்த்துவிடப்பட்டன.

இந்த மஞ்சுவிரட்டில் தேனி, திண்டுக்கல், மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து மாடுகளை வாகனங்கள் மூலம் அழைத்துவந்து பங்கேற்கச் செய்தனா்.

இந்த மஞ்சுவிரட்டில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் மாடுபிடி வீரா்கள் பாா்வையாளா்கள் என பல நூற்றுக் கணக்கானோா் கலந்துகொண்டனா். இதில் மாடு முட்டி 25 போ் காயமடைந்தனா். அவா்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டனா். தொழுவிற்குள் கொண்டுவரப்பட்ட அனைத்து காளைகளுக்கும் சிறப்புப் பரிசும், திடலில் சீறிப்பாய்ந்து வெற்றிபெற்ற காளைகளுக்கு வெள்ளி காசுகளும் பரிசாக வழங்கப்பட்டன.

விழாவுக்கான ஏற்பாடுகளை காரைக்குடி நாட்டாா்கள், நாட்டாா் இளைஞா்கள் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.