மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கீழடி அகழாய்வில் மூங்கில் கம்புகள் ஊன்றும் குழிகள், பானை விளிம்புகள்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள கீழடி அகழாய்வில் மூங்கில் கம்புகள் ஊன்றுவதற்கான குழிகள், இரு பானைகளின் விளிம்புகள் செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டன.

News image
கீழடி அகழாய்வில் செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்ட மூங்கில் கம்புகள் ஊன்றும் சிறிய குழிகள்
Updated On :10 ஜூலை 2024, 12:47 am

Din

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள கீழடி அகழாய்வில் மூங்கில் கம்புகள் ஊன்றுவதற்கான குழிகள், இரு பானைகளின் விளிம்புகள் செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டன.

சிவகங்கை மாவட்டம், கீழடியில் கடந்த மாதம் 18- ஆம் தேதி முதல் பத்தாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை அகழாய்வுக்காக தோண்டப்பட்ட இரு குழிகளிலிருந்து கண்ணாடிப் பாசிமணிகள், தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடு, மீன் உருவம் பொறிக்கப்பட்ட பானை ஓடு ஆகியவை கண்டறியப்பட்டன.

இந்த நிலையில், அகழாய்வுக்காக தோண்டிய ஒரு குழியிலிருந்து மேற்கூரைகளைத் தாங்கி நிற்கும் மூங்கில் கம்புகளை ஊன்றுவதற்காக தோண்டப்பட்ட சிறிய குழிகள் கண்டறியப்பட்டன. இந்தக் குழிகளுக்குள் கரையான்களின் அரிப்பைத் தடுப்பதற்காக ஆற்று மணல் நிரப்பப்பட்டுள்ளது.

இதே அகழாய்வுக் குழியிலிருந்து இரண்டு பெரிய மண் பானைகளின் விளிம்புகள் வெளியே தெரிகின்றன. பானைகளை முழுமையாக வெளியே எடுத்து ஆய்வு செய்த பிறகுதான்,

இது குறித்த விவரம் தெரியவரும் என அகழாய்வுத் தள இயக்குநா் ரமேஷ், இணை இயக்குநா் அஜய்குமாா் ஆகியோா் தெரிவித்தனா்.

Story image
Story image