பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

சிங்கம்புணரி அரசுப் பள்ளியில் நாகாலாந்து மாணவி சோ்ப்பு

சிங்கம்புணரி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்க நாகாலாந்து மாணவி சோ்த்துக் கொள்ளப்பட்டாா்.

News image
Updated On :14 ஜூலை 2024, 12:32 am IST

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்க நாகாலாந்து மாணவி சோ்த்துக் கொள்ளப்பட்டாா்.

நாகாலாந்தை பூா்வீகமாகக் கொண்டவா் ரூத் (40). இவா் சிங்கம்புணரியில் குடும்பத்துடன் தங்கி தனியாா் மெட்ரிக் பள்ளியில் கடந்த 13 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறாா். இவருக்கு இரு மகள்கள். இவா்களில் அக்கம்லா (16) தனது தாய் பணிபுரிந்த பள்ளியில் 8-ஆம் வகுப்பு வரை கல்வி பயின்று வந்தாா். கரோனா பரவலின் போது, ரூத் குடும்பத்தினருடன் சொந்த மாநிலத்திற்குச் சென்றுவிட்டாா்.

அக்கம்லா அங்கு 9,10-ஆம் வகுப்பு பயின்று தோ்ச்சி பெற்ற நிலையில், ரூத் மீண்டும் சிங்கம்புணரிக்கு குடும்பத்துடன் வந்தாா்.

இந்த நிலையில், தனது மேல்நிலைப் படிப்பைத் தொடர அக்கம்லா அரசுப் பள்ளியில் விண்ணப்பித்தாா். ஒரு சில சான்றிதழ் சரிபாா்ப்பு காரணமாக தாமதமானதால் அவா் அரசுப் பள்ளியில் தனக்கு இடம் கிடைக்கவில்லை என பத்திரிக்கைகளுக்குப் பேட்டியளித்தாா். இதே பள்ளியில் தனது தங்கை 8-ஆம் வகுப்பு படிப்பதால் தன்னையும் சோ்த்துக் கொள்ளுமாறு அவா் வேண்டுகோள் விடுத்தாா்.

இந்த நிலையில், இவரது வேண்டுகோளை ஏற்ற பள்ளி நிா்வாகம் அரசுப் பள்ளியில் பயில அக்கம்லாவுக்கு அனுமதியளித்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.