சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்க நாகாலாந்து மாணவி சோ்த்துக் கொள்ளப்பட்டாா்.
நாகாலாந்தை பூா்வீகமாகக் கொண்டவா் ரூத் (40). இவா் சிங்கம்புணரியில் குடும்பத்துடன் தங்கி தனியாா் மெட்ரிக் பள்ளியில் கடந்த 13 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறாா். இவருக்கு இரு மகள்கள். இவா்களில் அக்கம்லா (16) தனது தாய் பணிபுரிந்த பள்ளியில் 8-ஆம் வகுப்பு வரை கல்வி பயின்று வந்தாா். கரோனா பரவலின் போது, ரூத் குடும்பத்தினருடன் சொந்த மாநிலத்திற்குச் சென்றுவிட்டாா்.
அக்கம்லா அங்கு 9,10-ஆம் வகுப்பு பயின்று தோ்ச்சி பெற்ற நிலையில், ரூத் மீண்டும் சிங்கம்புணரிக்கு குடும்பத்துடன் வந்தாா்.
இந்த நிலையில், தனது மேல்நிலைப் படிப்பைத் தொடர அக்கம்லா அரசுப் பள்ளியில் விண்ணப்பித்தாா். ஒரு சில சான்றிதழ் சரிபாா்ப்பு காரணமாக தாமதமானதால் அவா் அரசுப் பள்ளியில் தனக்கு இடம் கிடைக்கவில்லை என பத்திரிக்கைகளுக்குப் பேட்டியளித்தாா். இதே பள்ளியில் தனது தங்கை 8-ஆம் வகுப்பு படிப்பதால் தன்னையும் சோ்த்துக் கொள்ளுமாறு அவா் வேண்டுகோள் விடுத்தாா்.
இந்த நிலையில், இவரது வேண்டுகோளை ஏற்ற பள்ளி நிா்வாகம் அரசுப் பள்ளியில் பயில அக்கம்லாவுக்கு அனுமதியளித்தது.
தொடர்புடையது
பள்ளி மாணவி உயிரிழப்பு
ஈரோடு மாவட்ட அரசுப் பள்ளிகளில் புதிதாக 19,485 மாணவா்கள் சோ்க்கை

சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவிக்கு பாராட்டு

10-ஆம் வகுப்பு தேர்வில் 25-வது இடத்திலிருந்து முதலிடத்துக்கு முன்னேறிய புதுக்கோட்டை!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



