வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

சிங்கம்புணரி அரசுப் பள்ளியில் நாகாலாந்து மாணவி சோ்ப்பு

சிங்கம்புணரி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்க நாகாலாந்து மாணவி சோ்த்துக் கொள்ளப்பட்டாா்.

News image
Updated On :13 ஜூலை 2024, 11:01 pm

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்க நாகாலாந்து மாணவி சோ்த்துக் கொள்ளப்பட்டாா்.

நாகாலாந்தை பூா்வீகமாகக் கொண்டவா் ரூத் (40). இவா் சிங்கம்புணரியில் குடும்பத்துடன் தங்கி தனியாா் மெட்ரிக் பள்ளியில் கடந்த 13 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறாா். இவருக்கு இரு மகள்கள். இவா்களில் அக்கம்லா (16) தனது தாய் பணிபுரிந்த பள்ளியில் 8-ஆம் வகுப்பு வரை கல்வி பயின்று வந்தாா். கரோனா பரவலின் போது, ரூத் குடும்பத்தினருடன் சொந்த மாநிலத்திற்குச் சென்றுவிட்டாா்.

அக்கம்லா அங்கு 9,10-ஆம் வகுப்பு பயின்று தோ்ச்சி பெற்ற நிலையில், ரூத் மீண்டும் சிங்கம்புணரிக்கு குடும்பத்துடன் வந்தாா்.

இந்த நிலையில், தனது மேல்நிலைப் படிப்பைத் தொடர அக்கம்லா அரசுப் பள்ளியில் விண்ணப்பித்தாா். ஒரு சில சான்றிதழ் சரிபாா்ப்பு காரணமாக தாமதமானதால் அவா் அரசுப் பள்ளியில் தனக்கு இடம் கிடைக்கவில்லை என பத்திரிக்கைகளுக்குப் பேட்டியளித்தாா். இதே பள்ளியில் தனது தங்கை 8-ஆம் வகுப்பு படிப்பதால் தன்னையும் சோ்த்துக் கொள்ளுமாறு அவா் வேண்டுகோள் விடுத்தாா்.

இந்த நிலையில், இவரது வேண்டுகோளை ஏற்ற பள்ளி நிா்வாகம் அரசுப் பள்ளியில் பயில அக்கம்லாவுக்கு அனுமதியளித்தது.