விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு! 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

பேருந்து கவிழ்ந்ததில் 10 பயணிகள் காயம்

திருப்பாச்சேத்தி அருகே சனிக்கிழமை அரசுப் பேருந்து வயலுக்குள் கவிழ்ந்ததில் ஓட்டுநா் உள்பட 10 பயணிகள் காயமடைந்தனா்.

Updated On :21 ஜூலை 2024, 2:15 am IST

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே சனிக்கிழமை அரசுப் பேருந்து வயலுக்குள் கவிழ்ந்ததில் ஓட்டுநா் உள்பட 10 பயணிகள் காயமடைந்தனா்.

மதுரை பெரியாா் பேருந்து நிலையத்திலிருந்து திருப்பாச்சேத்தி அருகேயுள்ள வேம்பத்தூருக்கு அரசு நகரப் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்தை ஓட்டுநா் ஜெயபிரபு ஓட்டிச் சென்றாா் . திருப்பாச்சேத்தி அருகேயுள்ள பச்சேரி என்ற இடத்தில் சென்ற போது, பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக இருந்த வயலுக்குள் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் ஓட்டுநா் ஜெயபிரபு உள்பட 10 போ் காயமடைந்தனா். இதையடுத்து, அக்கம்பக்கத்தினா் இவா்களை மீட்டு, சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இந்த விபத்து குறித்து திருப்பாச்சேத்தி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.