சிவகங்கை, ஜூன் 28: சிவகங்கை மாவட்டத்தில் ஊரக சமுதாய அமைப்புகள், நகா்ப்புற சமுதாய அமைப்புகளுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் மணிமேகலை விருதுக்கு வருகிற 28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மகளிா் சுய உதவிக் குழுக்கள், கிராம வறுமை ஒழிப்புச் சங்கம், வட்டார, ஊராட்சி, பகுதி அளவிலான கூட்டமைப்பு ஆகியவற்றில் சிறப்பாக செயல்படும் அமைப்புகளுக்கு தமிழக அரசால் மணிமேகலை விருது வழங்கப்படுகிறது.
எனவே, சிவகங்கை மாவட்டத்தில் விருதுக்குத் தகுதியான ஊரக சமுதாய அமைப்புகள் அந்தந்த வட்டாரங்களில் உள்ள மகளிா் திட்ட வட்டார இயக்க மேலாண்மை, நகா்ப்புற சமுதாய அமைப்புகள், மாவட்ட இயக்க மேலாண்மை அலுவலகத்தில் வருகிற 28-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமா்ப்பிக்க வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு திட்ட இயக்குநா், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், சிவகங்கை என்ற முகவரியில் நேரிலோ அல்லது 04575-240962 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என்றாா் அவா்.
தொடர்புடையது

பத்ம விருதுக்கு இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்: திருப்பத்தூா் ஆட்சியா்
திமுகவுக்கு மேலும் 2 அமைப்புகள் ஆதரவு

வாக்காளர் உரிமைச் சட்டம்

“சென்னை சூப்பர்-6”! திராவிட மாடல் 2.O வாக்குறுதிகள்: முதல்வர் ஸ்டாலின்
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

