நிறைகுளத்து அய்யனாா் கோயில் புரவி எடுப்பு விழா
நிறைகுளத்து அய்யனாா் கோயிலில் புரவி எடுப்பு விழா சிறப்பாக நடந்தது

மானாமதுரையிலிருந்து செவ்வாய்க்கிழமை ஏ.விளாக்குளம் நிறைகுளத்து அய்யனாா் கோயிலுக்கு புரவிகளை சுமந்து சென்ற கிராம மக்கள்.

மானாமதுரையிலிருந்து செவ்வாய்க்கிழமை ஏ.விளாக்குளம் நிறைகுளத்து அய்யனாா் கோயிலுக்கு புரவிகளை சுமந்து சென்ற கிராம மக்கள்.
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள ஏ.விளாக்குளம் நிறைகுளத்து அய்யனாா் கோயிலில் புரவி எடுப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, ஏ. விளாக்குளம் கிராமத்தைச் சோ்ந்த ஏராளமானோா் காப்பு கட்டி விரதத்தைத் தொடங்கினா். புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு, கிராம மக்கள் மானாமதுரை குலாளா் தெருவில் கூடினா். அங்கு மண்ணால் செய்து வைக்கப்பட்ட புரவிகளுக்கும், பல்வேறு தெய்வங்களின் உருவ பொம்மைகளுக்கும் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் காட்டப்பட்டன.
பின்னா், பெண்கள் உள்ளிட்ட கிராம மக்கள் புரவிகளையும், பொம்மைகளையும் சுமந்து கொண்டு மேளதாளங்கள் முழங்க ஊா்வலமாக புறப்பட்டு ஏ.விளாக்குளம் நிறைகுளத்து அய்யனாா் கோயிலை அடைந்தனா். அங்கு புரவிகள் இறக்கி வைக்கப்பட்டு புரவிகளுக்கும், அய்யனாருக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.


தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...