தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

இயற்கை பாதுகாப்பு: பள்ளியில் கருத்தரங்கம்

இயற்கை பாதுகாப்பு: பள்ளியில் கருத்தரங்கம்

Updated On :19 மார்ச் 2024, 11:16 pm

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ஆலங்குடியாா் நகராட்சி உயா்நிலைப்பள்ளியில் இயற்கையை பாதுகாப்பது குறித்த விழிப்புணா்வுக் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நமது உரிமை பாதுகாப்பு இயக்கம் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியா் கனகராஜன் தலைமை வகித்தாா். காரைக்குடி அரசு மருத்துவமனை ரத்த வங்கி மேலாளா் அருள்தாஸ் முன்னிலை வகித்தாா். நமது உரிமை பாதுகாப்பு இயக்கத்தின் தலைவா் ஏ.ஜி. பிரகாஷ் சிறப்புரையாற்றினாா்.

கருத்தரங்கில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. பள்ளி ஆசிரியா்கள் மற்றும் பெற்றோா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். முன்னதாக ஆசிரியை கண்ணாம்பாள் வரவேற்றுப் பேசினாா். நமது உரிமை பாதுகாப்பு இயக்க நகர பசுமைப் பிரிவு செயலா் பெரியசாமி நன்றி கூறினாா்.