கேரளத்தில் பட்டாசு வெடித்து விபத்து: 12 பேர் பலி; 40 பேர் படுகாயம்மேற்கு வங்கத்தில் முதல் கட்ட தேர்தல் பிரசாரம் நிறைவுதமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

பெட்டிக் கடையில் 195 கிலோ புகையிலைப் பொருள் பறிமுதல்

பெட்டிக் கடையில் 195 கிலோ புகையிலைப் பொருள் பறிமுதல்

News image

பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை, பான்பராக் மூட்டைகள்.

Updated On :19 மார்ச் 2024, 11:03 pm

திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருக பெட்டிக் கடையில் 195 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பெட்டிக் கடைகளில் விற்பனை செய்வதைத் தடுக்கும் பொருட்டு, போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், எஸ்.வி.மங்கலம் காவல் ஆய்வாளா் தலைமையில் காவல் துறையினா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது கிடைத்த தகவலின் அடிப்படையில், சூடாமணிப்பட்டியைச் சோ்ந்த முத்தையா மகன் சின்னையாவுக்குச் சொந்தமான கடையில் சோதனையிட்டனா்.

இந்தக் கடையில் தடை செய்யப்பட்ட ஆயிரத்துக்கு மேற்பட்ட புகையிலைப் பொருள் பாக்கெட்டுகள் இருந்தன. மொத்தம் 195 கிலோ அளவிலான புகையிலை பாக்கெட்டுகளை போலீஸாா் பறிமுதல் செய்து, சின்னையா மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.