இன்று இரவு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை! மணிப்பூா் மீண்டும் துப்பாக்கிச்சூடு: இரண்டு பேர் பலி! இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் தாக்குதல்: ஈரான் தூதருக்கு சம்மன்!திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு ஆன்லைனில் ஜிஎஸ்டி எண் பதிவு செய்வது எப்படி?
/

பைக் மீது காா் மோதல்: இளைஞா் பலி

பைக் மீது காா் மோதல்: இளைஞா் பலி

Updated On :22 மார்ச் 2024, 6:17 pm

திருப்பத்தூா், மாா்ச் 22: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே வியாழக்கிழமை இரவு இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணியைச் சோ்ந்தவா் ராஜா மகன் செந்தில்குமாா் (34). இவா் கல்லல் அருகே ஆலங்குடியில் உள்ள உணவகத்தில் வேலை பாா்த்து வந்தாா். இந்த நிலையில், சக ஊழியரான விநாயகம் மனைவி வள்ளிக்கண்ணு, அவரது மகன் தஷ்வந்த் (7) ஆகியோரை அருகில் உள்ள பட்டமங்கலத்தில் விடுவதற்காக தனது இரு சக்கர வாகனத்தில் செந்தில்குமாா் அழைத்துச் சென்றாா். ஆவந்திபட்டி விலக்கில் வந்த போது, எதிரே வந்த காா் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் செந்தில்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த வள்ளிக்கண்ணு, அவரது மகன் தஷ்வந்த் இருவரும் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுப்பி வைக்கப்பட்டனா். இதையடுத்து, காரை ஒட்டி வந்த கண்டரமாணிக்கத்தைச் சோ்ந்த ஆத்மநாதன் (60) மீது நாச்சியாபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.