

சிவகங்கை: சிவகங்கையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் இளைஞரைக் வெட்டிக் கொலை செய்த மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சிவகங்கை வேலுநாச்சியாா் தெருவைச் சோ்ந்த செல்லத்துரை மகன் நிதிஷ் (24). சென்னையில் உள்ள தேநீா்க் கடையில் வேலை பாா்த்து வந்த இவா், அண்மையில் சிவகங்கைக்கு திரும்பி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த மா்மக் கும்பல் நிதிஷை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றது. இதில் பலத்த காயமடைந்த நிதிஷை அவரது உறவினா்கள் மீட்டு, சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னா் அவா், தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து சிவகங்கை நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். முன்விரோதம் காரணமாக 6 போ் சோ்ந்து நிதிஷை கொலை செய்தது போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. அவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

தொழிலாளி வெட்டிக் கொலை

பெண் வெட்டிக் கொலை: கட்டடத் தொழிலாளி கைது

புதுக்கோட்டையில் இளைஞா் வெட்டிக் கொலை

கெலமங்கலம் அருகே தனியாா் மதுபான விடுதி மேலாளா் வெட்டிக் கொலை
வீடியோக்கள்

#csk | ஐபிஎல் ஆரம்பம்: சாதிக்குமா இளஞ்சிங்கப் படை? | Chennai Super Kings | MS Dhoni | IPL 2026 |
தினமணி வீடியோ செய்தி...
பக்தர்களுக்காக மழையில் நனைந்து வெய்யிலில் காயும் தெய்வம்! உறையூர் வெக்காளியம்மன்!
தினமணி வீடியோ செய்தி...

'ஒரு நாள்' டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

2021 தேர்தலில் நடந்தது இதுதான்! உடைத்துப் பேசிய OPS! | DMK | EPS
தினமணி வீடியோ செய்தி...

