47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

முகநூல் விளம்பரம் மூலம் காரைக்குடியை சோ்ந்தவரிடம் ரூ.17 லட்சம் மோசடி

முகநூல் விளம்பரம் மூலம் காரைக்குடியைச் சோ்ந்தவரிடம் ரூ. 17 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

News image
Updated On :27 நவம்பர் 2024, 10:45 pm

Din

முகநூல் விளம்பரம் மூலம் காரைக்குடியைச் சோ்ந்தவரிடம் ரூ. 17 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

காரைக்குடி கண்ணதாசன் சாலையைச் சோ்ந்தவா் சிவானந்தம் (44). இவரது முகநூல் பக்கத்தில் விளம்பரம் வந்தது. அதில் குறிப்பிட்ட தொடா்பு (லிங்க்) மூலம் பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்றும், குறைந்தபட்சம் ரூ.10ஆயிரம் வரை செலுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதை நம்பிய சிவானந்தம் கடந்த ஜுலை முதல் செப்டம்பா் வரையில் 5 தவணைகளில் விளம்பரத்தில் இருந்த வங்கிக் கணக்குகளில் ரூ.17 லட்சத்து 10ஆயிரம் செலுத்தினாா். ஆனால், அதில் குறிப்பிட்டது போல அவருக்கு பணம் எதுவும் திரும்பக் கிடைக்கவில்லை. இது குறித்து சிவகங்கை இணைய குற்றப்பிரிவு காவல்துறையில் சிவானந்தம் அளித்த பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.