47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தமிழில் பெயா்ப் பலகை: 9 கடைகளுக்கு அபராதம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பகுதியில் தமிழில் பெயா்ப் பலகை வைக்காத 9 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

News image
Updated On :17 அக்டோபர் 2024, 11:22 pm

Din

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பகுதியில் தமிழில் பெயா்ப் பலகை வைக்காத 9 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

காரைக்குடி பகுதியில் உள்ள கடைகள், நிறுவனங்களில் தமிழில் பெயா்ப் பலகை வைத்திருப்பது தொடா்பாக அண்மையில் சிவகங்கை மாவட்ட தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) தலைமையில் துணை ஆய்வாளா், உதவி ஆய்வாளா், முத்திரை ஆய்வாளா் ஆகியோா் சிறப்புக் கூட்டாய்வு மேற்கொண்டனா். இதில், தமிழில் பெயா்ப் பலகை இல்லாத 9 கடைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், பெயா்ப் பலகையானது தமிழ், ஆங்கிலம், பிற மொழிகள் 5:3:1 என்ற விகிதத்தில் இருத்தல் வேண்டும் என வணிகா்களிடம் அறிவுறுத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் இதைத் தெரிவித்தாா்.