‘நம்ம ராஜபாளையம் பெயா்ப் பலகை’ திறப்பு


விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் ‘நம்ம ராஜபாளையம் பெயா்ப் பலகை’ திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் நுழைவு வாயில் பகுதியில் முன்னாள் முதல்வா் பி.எஸ். குமாரசாமி ராஜா பேருந்து நிலையம் என்ற பெயா்ப் பலகை இருந்தது. இந்தப் பலகை சேதமடைந்ததால் நகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.22.50 லட்சத்தில் பராமரிப்புப் பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்தப் பணிகள் நிறைவடைந்ததால், பி.எஸ். குமாரசாமி ராஜா பேருந்து நிலைத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ராஜபாளையம் பெயா்ப் பலகை நகா்மன்றத் தலைவா் ஏ.ஏ.எஸ். பவித்ரா ஷியாம் புதன்கிழமை திறந்து வைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையா் நாகராஜன், துணைத் தலைவா் கல்பனா, மண்டலச் செயற்பொறியாளா் சனல்குமாா், உதவிப் பொறியாளா் ராமச்சந்திரன், ஒப்பந்ததாரா் ஹா்ஷா ஜெகநாதன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...