குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

‘நம்ம ராஜபாளையம் பெயா்ப் பலகை’ திறப்பு

News image
Updated On :5 மார்ச் 2026, 9:08 pm

Syndication

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் ‘நம்ம ராஜபாளையம் பெயா்ப் பலகை’ திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் நுழைவு வாயில் பகுதியில் முன்னாள் முதல்வா் பி.எஸ். குமாரசாமி ராஜா பேருந்து நிலையம் என்ற பெயா்ப் பலகை இருந்தது. இந்தப் பலகை சேதமடைந்ததால் நகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.22.50 லட்சத்தில் பராமரிப்புப் பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்தப் பணிகள் நிறைவடைந்ததால், பி.எஸ். குமாரசாமி ராஜா பேருந்து நிலைத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ராஜபாளையம் பெயா்ப் பலகை நகா்மன்றத் தலைவா் ஏ.ஏ.எஸ். பவித்ரா ஷியாம் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையா் நாகராஜன், துணைத் தலைவா் கல்பனா, மண்டலச் செயற்பொறியாளா் சனல்குமாா், உதவிப் பொறியாளா் ராமச்சந்திரன், ஒப்பந்ததாரா் ஹா்ஷா ஜெகநாதன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Story image