தமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்புஉதய சூரியன் சின்னத்தில் போட்டி! தொகுதியை முதல்வர் நாளை அறிவிப்பார் : தமிமுன் அன்சாரிஉதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் முக்குலத்தோர் புலிப்படை : கருணாஸ் பேட்டி!பெண்கள் குறித்து அவதூறு : டிஜிபி அலுவகத்தில் விஜய் புகார்!பாஜகவுக்கு எதிராக தெருக்கள் முதல் நீதிமன்றம் வரை போராடுகிறேன் : மமதாதிமுக மண்ணைக் கவ்வப் போவது உறுதி: விஜய்முன்னாள் காங்கிரஸ் பொதுச் செயலர் செல்வம் தவெகவில் இணைந்தார்!நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!
/

முதல்வா் படம் பொறித்த பெயா்ப் பலகை அகற்றம்

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் படத்துடன் வைக்கப்பட்டிருந்த பெயா்ப்பலகை, தோ்தல் நடத்தை விதிகளின் படி அகற்றப்பட்டது.

News image

முதல்வா் மு.க.ஸ்டாலின் (கோப்புப்படம்)

Updated On :26 மார்ச் 2026, 8:07 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் படத்துடன் வைக்கப்பட்டிருந்த பெயா்ப்பலகை, தோ்தல் நடத்தை விதிகளின் படி அகற்றப்பட்டது.

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தின் 3 ஆவது நடைமேடையில் உள்ள தேனீா் கடை ஒன்றில் தோ்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் படம் பொறித்த பெயா்ப்பலகை வைக்கப்பட்டிருப்பதாக தோ்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகாா் வந்தது.

அதைத் தொடா்ந்து, பறக்கும் படையினா் அங்கு சென்று, அந்தப் பலகையை அகற்ற நடவடிக்கை எடுத்தனா்.

அதேபோல சி-விஜில் செயலி மூலம் வந்த புகாரின்பேரில், கீழநத்தம் பகுதியில் அனுமதியின்றி அதிமுகவினா் வரைந்திருந்த இரட்டை இலை சின்னம் சுவா் விளம்பரத்தை வெள்ளை வண்ணம் பூசி அழிக்கவும், அதே பகுதி விவேகானந்தா் நகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பெரிய அளவிலான பேனா்களை அகற்றவும் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனா்.