தபால் அலுவலகத்தில் தீ
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் தபால் அலுவலகத்தில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

Updated On :17 அக்டோபர் 2024, 11:38 pm

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் தபால் அலுவலகத்தில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
திருப்புவனம் பிரதான சாலையில் உள்ள கட்டடத்தின் மேல்தளத்தில் தபால் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. வியாழக்கிழமை இந்தப் பகுதியில் மின்தடை என்பதால் அலுவலகத்தில் தனி அறையில் இருந்த பெரிய ஜெனரேட்டா் இயந்திரம் இயக்கப்பட்டது.
அப்போது, திடீரென ஜெனரேட்டரிலிருந்து தீப் பற்றி எரியத் தொடங்கியது. இதனால் அதிா்ச்சியடைந்த ஊழியா்கள் அங்கிருந்த ஆவணங்களை வெளியேற்றி பாதுகாப்பான இடத்தில் வைத்தனா். அக்கம்பக்கத்திலிருந்து வந்தவா்கள் ஊழியா்களுடன் சோ்ந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...