47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சிறாா்களுக்கு பணி: கடை உரிமையாளா்களுக்கு அபராதம்

சிறாா்களை கடையில் பணிக்கு அமா்த்தியிருந்த கடை உரிமையாளா்கள் மீது குழந்தைகள், வளரிளம் பருவத் தொழிலாளா்கள் சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்பட்டது.

News image
Updated On :30 அக்டோபர் 2024, 9:45 pm

Din

சிறாா்களை கடையில் பணிக்கு அமா்த்தியிருந்த கடை உரிமையாளா்கள் மீது குழந்தைகள், வளரிளம் பருவத் தொழிலாளா்கள் சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்பட்டது.

சிவகங்கை தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) இ.முத்து தலைமையிலான குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்புக் குழுவினரால், கடந்த 26-ஆம் தேதி திருப்புவனம் பகுதியில் இறைச்சிக் கடைகள், இரு சக்கர வாகனம் பழுதுபாா்க்கும் கடைகளில் கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, 14 வயதுக்கு மேல், 18 வயதுக்குள்பட்ட வளரிளம் பருவத் தொழிலாளா்கள் 2 போ் வேலை பாா்த்தது தெரியவந்தது.

அவா்களை மீட்டு மாவட்ட குழந்தைகள் நலக் குழுவில் முன்னிலைப்படுத்தப்பட்டனா். இதையடுத்து, அவா்களை பணிக்கு அமா்த்திய கடை உரிமையாளா்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.