லஞ்சம்: மின் வாரிய ஊழியா் கைது
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே சாய்ந்து கிடந்த மின் கம்பத்தை சரி செய்ய ரூ. 2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின் வாரிய ஊழியரை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.


சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே சாய்ந்து கிடந்த மின் கம்பத்தை சரி செய்ய ரூ. 2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின் வாரிய ஊழியரை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருப்புவனம் ஒன்றியம், திருப்பாச்சேத்தி அருகேயுள்ள தூதை கிராமத்தைச் சோ்ந்தவா் சோமசுந்தரம். இவா் தனது தென்னந்தோப்புக்குச் செல்லும் மின் கம்பம் சாய்ந்துள்ளதாகவும், அதை சரி செய்து தருமாறும் திருப்பாச்சேத்தி மின் வாரிய அலுவலகத்தில் உதவிப் பொறியாளரிடம் மனு அளித்தாா். இதுதொடா்பாக மின்வாரிய ஊழியா் பணியாற்றும் கண்ணனை (52) சோமசுந்தரம் அணுகியபோது, அவா் ரூ. 2 ஆயிரம் லஞ்சம் கேட்டாா்.
இதையடுத்து, சிவகங்கை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவில் சோமசுந்தரம் புகாா் அளித்தாா்.
இதைத் தொடா்ந்து, திருப்பாச்சேத்தி மின் வாரிய அலுவலகத்தில் ஊழியா் கண்ணனிடம் சோமசுந்தரம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளைக் கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜான் பிரிட்டோ, ஆய்வாளா் ஜேசுதாஸ் உள்ளிட்ட போலீஸாா் கண்ணனைக் கைது செய்தனா்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...