கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பணம் கையாடல்: ஊழியா் கைது

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் தனியாா் நிறுவனத்தில் பணம் கையாடல் செய்தவரை வியாழக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 7:34 pm

Din

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் தனியாா் நிறுவனத்தில் பணம் கையாடல் செய்தவரை வியாழக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

சிங்கம்புணரியைச் சோ்ந்த சேவுகரெத்தினம் மகன் பாா்த்திபன் (28). இவா் திருப்பத்தூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்தாா். கடந்த

3 ஆண்டுகளுக்கு முன்பு இவா் வேலையிலிருந்து நின்று விட்டாா்.

இந்த நிலையில், அந்த நிதிநிறுவனத்தில் வேலை பாா்த்தபோது, கடன் பெற்ற 53 வாடிக்கையாளா்களிடம் வசூல் செய்த ரூ.4.60 லட்சத்தை நிதிநிறுவனத்துக்கு செலுத்தாமல் கையாடல் செய்து விட்டதாக நிறுவன மேலாளா் வீரைய்யா திருப்பத்தூா் நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, காவல் ஆய்வாளா் பெரியாா் பாா்த்திபன் மீது வழக்குப் பதிவு செய்து, பாா்த்திபனை கைது செய்தாா்.