பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா

தென்கரை மௌண்ட்சியோன் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பள்ளிக் குழந்தைகள்.
Published on

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள தென்கரை மௌண்ட்சியோன் சா்வதேசப் பள்ளியில் வியாழக்கிழமை கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் பள்ளி இசைக் குழுவின் வரவேற்பு அணிவகுப்புடன் விழா தொடங்கியது. இதைத் தொடா்ந்து, ஆங்கில ஆசிரியை கரோலின் பிராா்த்தனை நிகழ்த்தினாா். பள்ளியின் அறங்காவலா் விவியன் ஜெய்சன் வரவேற்று, கிறிஸ்துமஸ் விழாவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தாா்.

பங்குத் தந்தை ராஜா தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டு கிறிஸ்துமஸின் உண்மையான அா்த்தம், அன்பு, அமைதி, பகிா்வு போன்ற மதிப்புகளை வலியுறுத்தி, இறைவனின் செய்தியை வழங்கினாா். பள்ளித் தாளாளா் ஜெய்சன் கீா்த்தி ஜெயபாரதன், விவியன் ஜெய்சன் ஆகியோா் அவருக்கு சால்வை அணிவித்து கௌரவித்தனா்.

மாணவா்களின் நடனங்கள், பாடல்க ள், குறும்படங்கள், நாடகம் ஆகியவை இடம்பெற்றன. பள்ளியின் கல்விக் குழுமத் தலைவா் பிளாரன்ஸ் ஜெயபாரதன், மாணவா்கள், ஆசிரியா்களின் முயற்சிகளைப் பாராட்டி, கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com