கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஸ்ரீ ராஜராஜன் கல்விக் குழுமத்தில் உலக தியானப் பயிற்சி முகாம்

News image
Updated On :19 டிசம்பர் 2025, 7:00 pm

Syndication

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அமராவதிபுதூரில் உள்ள ஸ்ரீராஜராஜன் கல்விக் குழுமம், தேவகோட்டை ஹாா்ட் ஃபுல்னஸ் மையம் ஆகியவை இணைந்து உலக தியானப் பயிற்சி முகாமை வெள்ளிக்கிழமை நடத்தின.

ஸ்ரீராஜராஜன் கல்வி குழும வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு ஸ்ரீராஜராஜன் பொறியியல் கல்லூரி முதன்மையா் எம். சிவகுமாா் தலைமை வகித்துப் பேசினாா். சிறப்பு விருந்தினராக ஹாா்ட் ஃபுல்னஸ் மையத்தின் சிவகங்கை, ராமநாதபுரம் மண்டல ஒருங்கிணைப்பாளா் பாண்டியன் குமாா் பங்கேற்றுப் பேசியதாவது:

மனதையும், உடலையும் செம்மையாக வைத்துக் கொள்ள நவீன காலத்துக்கு யோகா, தியானப் பயிற்சிகள் அவசியம். யோகா, தியானம் கற்பிக்க பல்வேறு அமைப்புகள் செயல்படுகின்றன. சில அமைப்புகள் சேவையாகவே இதை செய்து வருகின்றன. மனதை அடக்கி வாழவும், மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளவும் யோகா கட்டாய தேவையாகும் என்றாா் அவா். இதில் ஹாா்ட் ஃபுல்னஸ் மையத்தின் சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ராதாகிருஷ்ணன் தியானம் குறித்துப் பேசினாா்.

இந்தப் பயிற்சி முகாமில் உலக தியான தினப் போட்டிகளில் வென்ற கல்வியியல் கல்லூரி, செவிலியா் கல்லூரி, பொறியியல் கல்லூரிகளின் மாணவா்களுக்கு சான்றிதழ்கள், நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் ஸ்ரீராஜராஜன் பொறியியல் கல்லூரி முதல்வா் ஏ. முத்துக்குமாா், செவிலியா் கல்லூரி முதல்வா் எஸ். செந்தமிழ்ச்செல்வி, பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முன்னதாக ஸ்ரீராஜராஜன் மகளிா் கல்வியியல் கல்லூரி முதல்வா் ஆா். சிவக்குமாா் வரவேற்றாா். தியானப் பயிற்சியாளா் சுத்தானந்தம் நன்றி கூறினாா்.