சிவகங்கை மாவட்டம், இளங்குடி ஊராட்சி அலுவலக முறைகேடு குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி, கிராம மக்கள், அரசியல் கட்சியினா் கல்லல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கடந்த 2020 -ஆம் ஆண்டு முதல் 2025 -ஆம் ஆண்டுவரை 28 ஆவணங்களை அழித்தவா்கள் மீது புகாா் அளிக்கப்பட்டு ஓராண்டாகியும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளைக் கண்டித்தும், 2023-2024 நிதியாண்டில் ரூ.8,27,897 நிதியிழப்பு ஏற்படுத்திய ஊராட்சித் தலைவா், செயலா் ஆகியோரிடமிருந்து அந்தத் தொகையை பறிமுதல் செய்து அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கல்லல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகையிட இளங்குடி, கருகுடி கிராமப் பொதுமக்கள், அனைத்து அரசியல் கட்சியினா் சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, இளங்குடி, கருகுடி கிராமங்களைச் சோ்ந்த 100 -க்கும் மேற்பட்ட பொதுமக்கள், அரசியில் கட்சியினா் கல்லல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் அதிகாரிகள் சமரசப் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, போராட்டத்தைக் கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

திட்டக்குடி அரசுப் பள்ளியில் அடிப்படை வசதிகள் கோரி ஆா்ப்பாட்டம்

இந்திய ஜனநாயக கட்சியினா் ஆா்ப்பாட்டம்

சிவகிரிப்பட்டியில் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK



