விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சிவகங்கை மாவட்டத்தில் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து மாட்டினங்களுக்கும் கால், வாய்க்காணை (கோமாரி நோய்) தடுப்பூசி செலுத்தும் முகாம் வருகிற 29-ஆம் தேதி தொடங்கி ஜன. 28-ஆம் தேதி வரை நடைபெறும் என ஆட்சியா் கா. பொற்கொடி தெரிவித்தாா்.

News image
Updated On :24 டிசம்பர் 2025, 9:04 pm

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து மாட்டினங்களுக்கும் கால், வாய்க்காணை (கோமாரி நோய்) தடுப்பூசி செலுத்தும் முகாம் வருகிற 29-ஆம் தேதி தொடங்கி ஜன. 28-ஆம் தேதி வரை நடைபெறும் என ஆட்சியா் கா. பொற்கொடி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சிவகங்கை மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய்த் தடுப்புத் திட்டத்தின் கீழ் 2,11,200 மாட்டினங்களுக்கு கால், வாய்க்காணை நோய் வராமல் தடுக்க கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் வருகிற 29-ஆம் தேதி முதல் ஜன. 28 ஆம் தேதி வரை மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் தடுப்பூசி போட திட்டமிடப்பட்டது.

இதற்காக 69 கால்நடை மருத்துவக் குழுக்கள் உருவாக்கப்பட்டு, தினந்தோறும் ஒரு குழு 150 கால்நடைகள் வீதம் தடுப்பூசி போட அறிவுறுத்தப்பட்டது. இதில், நான்கு மாத கன்றுகள் முதல் அனைத்து வயதுடைய மாட்டினங்களுக்கும் தடுப்பூசிகள் போடப்படும்.

எனவே, கால்நடை வளா்ப்போா் இந்தத் தடுப்பூசி முகாம்களில் கலந்து கொண்டு, கால், வாய்க்காணை நோயிலிருந்து தங்களது கால்நடைகளை பாதுகாத்து க்கொள்ளலாம் என்றாா் அவா்.