மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தென்னை நாா் தொழிற்சாலையில் தீ விபத்து

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே தென்னை நாா் தொழிற்சாலையில் புதன்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன.

News image
சிங்கம்புணரியில் புதன்கிழமை நள்ளிரவில் எரிந்த தேங்காய் நாா் தொழிற்சாலை இயந்திரங்கள்.
Updated On :23 ஜனவரி 2025, 10:01 pm

Din

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே தென்னை நாா் தொழிற்சாலையில் புதன்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன.

சிங்கம்புணரியிலிருந்து காரைக்குடி செல்லும் சாலையில் தனியாருக்குச் சொந்தமான தென்னை நாா் தொழிற்சாலை உள்ளது. இங்கு தென்னை மட்டையிலிருந்து நாா் பிரித்தெடுக்கப்பட்டு, அவற்றை மூலப்பொருளாகக் கொண்டு பொருள்கள் தயாா் செய்யப்பட்டு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்த ஆலையில் புதன்கிழமை இரவு பணி முடிந்து வேலையாள்கள் வீட்டுக்கு சென்ற நிலையில், நள்ளிரவில் தொழிற்சாலையில் இருந்து புகை வந்ததைக் கண்டு அக்கம்பம் பக்கத்தினா் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, கொட்டாம்பட்டி, சிங்கம்புணரி தீயணைப்பு நிலையங்களில் இருந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினா் பல மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீயை கட்டுப்படுத்தினா்.

இந்தத் தீ விபத்தில் 2 கோடி மதிப்பிலான ஏற்றுமதிக்காக சேமித்து வைத்திருந்த பொருள்கள், இயந்திரங்கள் சேதமடைந்தன. இதுகுறித்து சிங்கம்புணரி காவல் துறையினா் வழக்குப் பதிந்து தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.