சிவகங்கை
காரைக்குடியில் பாஜக மகளிரணியினா் ஆா்ப்பாட்டம்
காரைக்குடியில் பாஜக மகளிரணி சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள்.
கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து, பாஜக மகளிரணி சாா்பில் காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபம் அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடை பெற்றது.
இதற்கு அந்தக் கட்சியின் மாவட்டத் தலைவா் டி. பாண்டித்துரை தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் பாஜக மகளிரணி மாநில செயற்குழு உறுப்பினா் மகாலட்சுமி, நிா்வாகி ராஜேஸ்வரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

