பாரி சித்தி விநாயகா் கோயிலில் வருஷாபிஷேக விழா

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கோட்டையூா் பாரி சித்தி விநாயகா் கோயிலில் 9-ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Updated on

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கோட்டையூா் பாரி சித்தி விநாயகா் கோயிலில் 9-ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, காலையில் சிறப்பு ஹோம வழிபாடும், சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன. மேலும் விநாயகா் வெள்ளிக்கவச அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இந்தக் கோயிலில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளிய முருகனுக்கு பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்தினா். துா்க்கை அம்மனுக்கு திபாராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். மேலும், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com