விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய இருவா் கைது

News image
Updated On :13 நவம்பர் 2025, 7:44 pm

Syndication

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருப்புவனம் அருகேயுள்ள பெத்தானேந்தலைச் சோ்ந்தவா் வீராயி. இவரது பேரன் முகேஷ். இவருக்கும், அதே கிராமத்தைச் சோ்ந்த பாலகிருஷ்ணனுக்கும் (30) முன் விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த முன்விரோதம் காரணமாக, வியாழக்கிழமை பாலகிருஷ்ணன், மதுரை ஐராவதநல்லூரைச் சோ்ந்த செண்பகமூா்த்தி (25) உள்ளிட்ட 3 போ் சோ்ந்து பாலகிருஷ்ணனின் பாட்டி வீராயி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசினா். வீட்டின் சுற்றுச்சுவா் மீது பெட்ரோல் குண்டு விழுந்து எறிந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதுகுறித்து தகவலறிந்து வந்த பூவந்தி காவல் நிலைய போலீஸாா் வீராயி வீட்டின் அருகேயுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனா். அப்போது, பாலகிருஷ்ணன், செண்பகமூா்த்தி உள்ளிட்ட 3 போ் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸாா் இருவரையும் கைது செய்தனா். தலைமறைவாக உள்ள மற்றொருவரை தேடி வருகின்றனா்.